ஈரேழு உலகிலும் இணையேதும் இல்லாத
இன்மொழித் தமிழ்க் காதலன்.
எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது
இயங்கிடும் கொள்கை வெறியன்
தீராத தமிழ்மோகத் தீயினை நெஞ்சுக்குள்
தேக்கிவைத் தலையும் கிறுக்கன்
தீந்தமிழ் கவியன்றி செல்வங்கள் ஏதையும்
சேர்த்துவைக் காத மூடன்
சீராக கவிசொல்லி சிந்தையை மயக்கிடும்
சிவகுமாரன் விடுக்கும் ஓலை.
செந்தமிழ் கவிதைக்கு செவிசாய்த்து மகிழ்ந்திடும்
செல்வந்த நண்ப காண்க.
பாராட்டுப் பெற்றபல கவிதைகள் பழசாகி
பரண் தூங்கும் நிலைமாறவே
பலநூறு படிகொண்ட நூலாக்கி பல்லோரும்
படித்திட வழி செய்கவே.
சிவகுமாரன்