புதன், செப்டம்பர் 21, 2022

கடவுளைக் காட்டியவன்




உன்னால் தான்

நான்

சாமி கும்பிட்டேன்.

இடுப்பில் துண்டு கட்டி

கோயிலுக்கு வெளியே 

நின்றவர்களை

ஆலயம் நுழைய வைத்தவன் நீ.

நீ கடவுளே இல்லை என்றாய்.

உன்னால் தான்

கடவுளே எங்களை கண்டுகொண்டார். 


இது பெரியார் பூமியா

ஆன்மீக பூமியா எனும் 

கேள்வி எனக்கு இல்லை.

இது

பெரியார் உருவாக்கிய

ஆன்மீக பூமி. 


நீ

கடவுளை மறக்கச் சொன்னாய்.

மனிதனை நினைக்கச் சொன்னாய்.

நாங்கள்

யாரையும் மறக்கவில்லை.


என் பார்வையில்

இராமானுஜர்

வள்ளலார்

அடிகளார்...

இந்த வரிசையில்

ஆன்மீகப் புரட்சி செய்த

பெரியார் நீ 


எங்கள் கடவுள்கள்

இருக்கும் வரை

நீயும் இருப்பாய்.

வாழ்க நின் புகழ்.

                                              சிவகுமாரன்

                                                17/09/2022