செவ்வாய், ஜூலை 23, 2019

காற்றோடு


மாறிக் கொண்டே இருக்கிறது
முகவரி.
அழிந்து கொண்டிருக்கின்றன
அடையாளங்கள்.
கால அலைகளில்
கரைந்து செல்கிறது
காலடிச்சுவடு.
இறுதியாய்.....
விட்டுச்செல்லும்
சாம்பலோடு
கைகுலுக்க
காத்திருக்கின்றன
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
கவிதைகள்.

சிவகுமாரன்