வியாழன், ஆகஸ்ட் 26, 2010

காதல் வெண்பாக்கள் 2

        மழை
ஏக்கப் பெருமூச்சை
   என்னிதயச் சோகத்தைப்
போக்கும் உனது
    பனிப்பார்வை! -தூக்கக்
கனவுக்குள் பேசும்உன்
   கண்கள்! அவையென்
மனதுக்குள் பெய்யும்
     மழை.

பொய்த்தவம்.
மனக்குகையில் நான்தேடும்
   மௌனம் கலைக்கும்
கணக்கின்றி நீவீசும் 
   கற்கள்!- எனக்குள்ளே 
என்னைத் தினம் தேட
  எத்தனிப்பேன், ஆனாலும்
உன்னைத் தொடரும் 
  உயிர்.

                               -சிவகுமாரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக