சனி, மார்ச் 22, 2014

ஒப்பனை



ஒப்பனைகளில் 
ஒளிந்து கொண்டிருக்கிறது 
வயது.

கவிதைக்கு அழகு 
கற்பனை எனில் 
உடலுக்கு அழகு 
ஒப்பனை.

வழித்து எறிந்து 
ஒழித்து விட நினைத்தாலும் 
கடமை முடியும் முன் 
கணக்கை முடிக்க வரும்  
காலனின் வருகையை 
கண் மறைப்பதில் 
வெற்றி கண்டு விடுகிறது.
ஒவ்வொரு முறையும் 
ஒப்பனை.

உண்மையை மறைப்பதால் 
தலை குனிந்தாலும் 
தன்னம்பிக்கை தருவதால் 
தலை நிமிர்ந்து விடுகிறது 

ஒப்பனை 
அதற்கு 
ஒப்பிலை.

சிவகுமாரன்