சனி, பிப்ரவரி 25, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 4


எழுதிக் குவித்துநான்
  என்னபயன் கண்டேன்?
தொழுதுன்னைக் கேட்கிறேன்
  தோழா - அழுதழுது
பாடையில்   போகையில்
  பாழுங் கவிதைகளை
கூடவே போட்டுக்
  கொளுத்து.


கொளுத்தியது போக
   குறையேதும் உண்டேல்
களைத்து விடாதே
   கலங்கி - முளைக்கும்
விதையாகும் முன்னரே
   வெட்டிக் குழிக்குள் 
புதைத்துவிட்டு நிம்மதியாய்ப்
    போ.

(புதுச்சேரி -1994  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் - என் கவிதைகளை கேலி பேசிய நண்பனிடம் மனம் வெறுத்துப் போய் சொன்னது. )