ஞாயிறு, ஜூன் 04, 2017

கபீரும் நானும் 35



तिनका कबहुँ ना निंदिये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीड गहरी होय ॥

Tinka kabahu na nindiye, paav tale jo hoye
Kabahu udd aankho pade, peed gehri hoye

One should not abuse a blade of grass under one's feet.
If that happens to strike on one's eye then there will be terrific pain.

சிறுஉமி தனையும் "சீ"யென எண்ணி
    சிறுமை செய்யேல் மறந்து.
கருவிழி தொட்டு கண்ணை உறுத்தும்
    காற்றில் உமியது பறந்து.
-----------------------------------------------------------------------------------------------------------------31.

सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥

Sab dharthi kaagath karoon , ligni sab banrai
Saath samudhra kaa masi karoon gurugun ligha naa jaay.

Even if the whole earth is transformed into paper with all the big trees made into pens and if the entire water in the seven oceans are transformed into writing ink, even then the glories of the Guru cannot be written. So much is the greatness of the Guru.

கடலே மையாய் காகித நிலத்தில் 
   காட்டு மரத்தால் எழுது 
அடங்கா அதனில் ஆசான் பெருமை.
    அடிகள் பணிவாய் தொழுது .
---------------------------------------------------------------------------------------------------------------------32.


कबीर दर्शन साधु का, बडे़ भाग दरशाय ।
जो होवै सूली सजा, कांटे ई टरि जाय ॥


Kabir dharshan saadhu ka, bade baag dharshai
Jo hovey sooli sajaa, kaante eentari jaai.

It is our fortune to have a chance of meeting saints.
Even the injury by sword will be felt as the touch of a small thorn.


சத்திய ஞானியர் தரிசனம் பெற்றால்
    சகத்தினில் கிட்டும் பேறு .
கத்தியின் குத்தும் குறுமுள் வலிபோல்
     கணத்தில் மாறும் ஊறு .
---------------------------------------------------------------------------------------------------------------------33.

बकरी पात खात है ,ताकि माढी खाल 
जो बकरी को खात है , ताको कौन हवाल 

bakri path ghath hai thaaki maathi ghaal
jo bakri ko ghaath hai thaako koun havaal 

For mere eating leaves and grass the goat gets the punishment of slaughter.
What punishment the man will have who kills and eats the flesh of the goat?

இலையும் தழையும் தின்றதின் பாவம் 
    இறைச்சியாய் ஆனது ஆடு 
தலையை வெட்டி தின்ற உன்  பாவம் 
     தொலைப்பதுவோ பெரும் பாடு. .                
----------------------------------------------------------------------------------------------------------------------34.

चिड़ी चोंच भर लै गई ,नदी घटया ना नीर 
दान दिये धन ना घटै, कह गए दास कबीर 

Chidiya choch bhar le gayi, nathi ko ghatya naa neer
Dhaan dhiye dhan naa ghate , kahu gaye daas kabir.

A river will not have depletion of its water when a Sparrow flies away with a beakful of water.
Similarly one does not decrease his wealth by donating to poor.

குருவி தன் அலகால் கொத்திப் பருகிட 
        குறையுமோ நதியின் நீரும்?
இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால் 
       ஏழையர் ஆவரோ யாரும் ?
----------------------------------------------------------------------------------------------------------------------35.
                                      
                                                                                                                                                                                                                                                                  ...........தொடரும் 

சமர்ப்பணம்:

பன்மொழி வித்தகர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களுக்கு
 . 


சிவகுமாரன் 


34 கருத்துகள்:

  1. அற்புதம் அருமை
    மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்

    முதல் மூன்று கவிதைகளிலும்
    சீரின் இறுதிச் சொல்லில் "ம்"
    சேர்த்துப் படித்தேன்
    பொருள் மாறாதும்
    இன்னும் சுகமாயும் இருந்தது

    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரமணி சார்
      \\\\முதல் மூன்று கவிதைகளிலும்
      சீரின் இறுதிச் சொல்லில் "ம்"
      சேர்த்துப் படித்தேன்
      பொருள் மாறாதும்
      இன்னும் சுகமாயும் இருந்தது////

      அட ஆமாம் . நானும் ரசித்தேன் .என்னே நம் தமிழின் சிறப்பு

      நீக்கு
  2. அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக இலையும் தழையும் தின்றதின் பாவம்...அதிகமாக ரசித்தேன். ஆங்கிலத்தைவிட தமிழில் மிகவும் அருமையாக உள்ளது. மொழிபெயர்ப்பு நீங்கள் செய்வதா அல்லது பிற நூல்களிலிருந்தா என்பதை அறிய விரும்புகிறேன். இந்தியிலிருந்து ஆங்கிலத்தில், பின்னர் ஆங்கிலத்திலிருந்து உரைநடையில் மனதில் உள்வாங்கிக்கொண்டு கவிதை நிலைக்குக் கொண்டு வரல் என்ற நிலையில் மூன்று வகையான மொழிபெயர்ப்பினை மேற்கொள்வது என்பது சற்றுச் சிரமமாகும். சுமார் 2000 பக்கங்கள் மொழிபெயர்த்தவன் என்ற நிலையில் மொழிபெயர்ப்பின் இடர்ப்பாடுகளை அறிவேன். உரைநடையிலிருந்து கவிதைக்குப் பொருள் மாறாமல் அதே வீச்சோடு கொண்டு வருவது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முனைவர் அய்யா. கபீரின் தோகேக்களின் இந்தி மூலத்திலிருந்து என் சரக்கையும் கலந்து கவிதையாக்குகிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பு சில இணையத்திலிருந்து பல நானே. ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டினால் மகிழ்வேன். மிக்க நன்றி அய்யா.

      நீக்கு
  3. ஆஹா! அனைத்தும் அருமை! எப்படி இப்படி அருமையாக மொழி பெயர்க்கிறீர்கள்! தமிழ் விளையாடுகிறது உங்கள் மூளையில்! ரசித்தோம்!!!

    --துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ஆங்கிலமொழி பெயர்ப்பிலிருந்து வரும் கவிதை என்று தோன்றினாலும் கலப்படமில்லா கவிதைகள் என்றே தெரிகிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அய்யா. கபீர்தாசரின் தோகேக்களை அனுபவித்துப் படித்ததன் விளைவு தான் இந்தக் கவிதைகள். இந்தி தெரியாதவர்களுக்காகத் தான் ஆங்கில மொழியாக்கம். மேலும் மூலத்தை படிக்காமல் அனுபவிக்காமல் மொழிபெயர்த்தல் சாத்தியமாகாது என்பது எண்ணம். நன்றி

      நீக்கு
  5. அருமை. கவிக்கோவுக்கு சிறந்த சமர்ப்பணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. கவிக்கோ அவர்களை ஒருமுறை சந்தித்த போது பிறமொழி இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று சொன்னார்.

      நீக்கு
  6. கவிஞன் கபீரன் கவிதைகள் இப்
    புவிக்கு வந்தோர் வருவோர் அனைவருக்குமொரு
    வழிகாட்டி.
    தன்னையும் ஒரு தராசில் நிற்கவைத்துப்பின்
    தான் யாரென உணரவைக்கும்
    தத்துவ ஞாநி
    விலங்குகள் அனைய உலகில் யாதொரு
    வில்லங்கம் இல்லாது வாழ வகை சொல்லும்
    விற்பன்னன் விசித்திரன். அவன்
    வில்லின் அம்பாய் அவன்
    இலக்கு ஒன்றே குறியாய்த் தங்கள்
    இலக்கியம் அமைந்தது
    இணையிலா மகிழ்வு தருகிறது.


    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா. தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்கிறேன்

      நீக்கு
  7. குருவி தன் அலகால் கொத்திப் பருகிட 
            குறையுமோ நதியின் நீரும்?
    இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால் 
           ஏழையர் ஆவரோ யாரும் ?//
    அருமை.

    கபீரின் கவிதைகளை மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கபீருக்குள் மீண்டும் பயணிக்கவைத்துள்ளீர்கள். இதமாக இருக்கிறது மனதுக்கு.

    பதிலளிநீக்கு
  9. வாருங்கள் ஏகாந்தன் சார். சேர்ந்தே பயணிப்போம் கபீருக்குள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான தமிழ் வடிவம்.அருமை

    பதிலளிநீக்கு
  11. கருத்துச் செறிந்த வார்த்தைகள்.அழகிய மொழிபெயர்ப்பு.
    அநேக கபீரீன் பாடல்களின் மையக் கருத்துக்கள் திருக்குறளுடன் இசைவாய் உள்ளது.
    பாடல் 32:
    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
    இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. வள்ளுவன் தன்னை உலகினுக்களித்து வான்புகழ் கொண்ட தமிழகம் அல்லவா.

      நீக்கு
  12. ஆஹா என்ன அற்புதமான உவமைகள்.சொல் பொருள் சந்தம் இனிமை இனிமை. நீங்கள் அருட் கவிதான். புத்தகமாய் வெளியிடுங்கள். உங்கள் திறமை உலகுக்கு இன்னும் அதிகமாய் தெரிய வேண்டும்.ஒசிமாண்டியாஸ் என் நினைவில் இன்னும் அகலாமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முரளி. தங்களைப் போன்றோரின் ஆதரவில் கூடிய விரைவில் புத்தகம் வெளியிட ஆசை தான்.
      ஓசிமாண்டியாசிஸ் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. பெருமகிழ்ச்சி.

      நீக்கு
  13. குருவி தன் அலகால் கொத்திப் பருகிட
    குறையுமோ நதியின் நீரும்?
    இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்
    ஏழையர் ஆவரோ யாரும் ?//

    அருமை!

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொன்றும் அருமை கபீர் எப்படிப் உவமைகளை எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார்! . அதை மிக சிறப்பாக இனிமைததமிழில் அளித்திருக்கிறீர்கள். இதை விட சிறப்பாக யாராலும் மொழி பெயர்க்க முடியாது

    பதிலளிநீக்கு
  15. //குருவி தன் அலகால் கொத்திப் பருகிட
    குறையுமோ நதியின் நீரும்?
    இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்
    ஏழையர் ஆவரோ யாரும் ?//
    வயா முத்து இதனை படித்தால் சினிமாவில் மாற்றம் செய்து பயன் படுத்தி விடுவார்.

    பதிலளிநீக்கு