திங்கள், செப்டம்பர் 28, 2015

நீங்கள் தான்!


காலங்கள் ஓடிடும் நில்லாது.-நம்
கணக்குகள் அதன்முன் செல்லாது.
பாலனாய் தவழ்ந்திட்ட நாள்முதலாய்- நெஞ்சில்
பசுமையாய் பதிந்தவை அகலாது.
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.


கிளைவிட்டு பறவைகள் பறந்திடலாம்- அதன்
கீழ்வளர் விழுதுகள் விலகாது.
முளைவிட்ட நாள்முதல் முகம்பார்த்தே-உச்சி
முகர்ந்திட்ட அன்புக்கு விலையேது?
நான்
வளர்வதினால் அந்த
வான்தொடலாம்-என்
வேர் உங்கள்
பூமியில்
தான்

என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.
நீங்கள்....தான்
நீங்கள்... தான்


தன்னில் தாயும்,
நெஞ்சினில் தந்தையும் சுமந்தீர்!
காலங்கள் தோறும்
நீங்கள் சொல்லும்
எந்த
வார்த்தையும் வேதம்,
நீங்கள் செல்லும்
அந்தப்
பாதையில் பயணம்,
நான்
பார்ப்பதெல்லாம்
உங்கள்
விழிவழியே,
உங்கள்
பரம்பரை
பேர்சொல்ல நான்
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்