திங்கள், நவம்பர் 06, 2017

வலி


வண்டு துளைக்கையில்
வலி பொறுத்த
கர்ணனும்,
அம்புப் படுக்கையில்
அரற்றாத பீஷ்மனும்,
தசையறுத்துத்
தராசில் வைத்த
சிபியும்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
சூட்சுமம் ஒன்றை.
வலி தாங்குதலே
வலிமை என்று.

சருகை உதிர்த்த
மரத்தின் வலியும்
சிறகை உதிர்த்த
பறவையின் வலியும்
கண்டுணர
நீ
கவிஞனாக வேண்டியதில்லை.
காயம் படு போதும்.

                                                                                                                                                      
சிவகுமாரன்
06.11.2017