திங்கள், ஜூலை 23, 2012

காதல் வெண்பாக்கள் 34

     

     

          வலை 

தலைகால் புரியாமல் 
  தள்ளாடிக் காதல்
வலையில் விழுந்தேன் 
  வகையாய் - மலைமேல்
விளக்காய் இருந்தயென் 
  வாழ்க்கையில் ஏதும்
இலக்கின்றி போனதடி 
  இன்று.



         


                      நிலை 


இன்றைக்கோ நாளைக்கோ
   என்றைக்கு  தீருமடி
கொன்று புதைக்குமுன்
   கோபங்கள்? - நன்றாய்
வதைக்கின்றாய் என்னைநீ, 
  வாட்டும் பிரிவில்
பதைக்கின்ற என்னிலையைப் 
  பார்த்து.



சனி, ஜூலை 07, 2012

ஆலைக்குரல் 20




அற்பமென பாதுகாப்பை அலட்சியம் செய்தல்
தற்கொலை முயற்சிக்குச் சமம் ,

விழிப்புணர்ச்சி இன்றி வேலை செய்வோர்க்கு 
பழிச்சொல் வநதிடும் பார் .

சுமையென்பார் பாதுகாப்பு , சுகமென்பார் விதிமீறல் 
இமைப்பொழுதில் வருவான் எமன், 

எனக்கென்ன என்று இருந்தால் நிச்சயம் 
உனக்கும் வரும்பார் ஊறு..


தள்ளிப் போட்ட காரியம் - கடலில்
அள்ளிப் போட்ட பொருள்.. 

சிவகுமாரன்

மேலும் குரல் கேட்க இங்கே செல்லவும்