புதன், அக்டோபர் 13, 2010

வழிப் பிள்ளையார்

கோடி கோடியாய்
கொட்டிக் கிடக்குது
சுவிஸ் வங்கிகளில்


தங்கமும் வைரமும்
தளும்பி வழியுது
திருப்பதி உண்டியலில்


வெளைஞ்சது எல்லாம்
வீணாய்ப் போகுது
தானியக் கிடங்குகளில்


கணக்கே இல்லாமல்
கடைத் தேங்காய்கள்.

வயிறு ஒட்டிய
வழிப் பிள்ளையார்கள்.

எடுத்து உடைக்குமா
இ.பி.கோ. கரங்கள் ?

                  -சிவகுமாரன்

1 கருத்து:

  1. வயிறு ஒட்டிய வழிப்பிள்ளையார்
    கணக்கேயில்லாமல் கடைதேங்காய்கள்
    அதுவும்
    கடைகாரர் யாரென்றும் தெரியாமல்.
    உண்மைதான்.
    எடுத்து உடைக்க இபிகோவால் மட்டுமே முடியும்.
    எங்கோ போய்விடும் இந்தியா.
    இதற்காக ஒரு இயக்கம் தொடங்கினால்
    ஒட்டு போடுவதோடு நான் பிரச்சாரமும் செய்யத் தயார்

    பதிலளிநீக்கு