
மழையில் தணிகிறது.

கடலைக் குடிக்கிறது
.
அலைகளின் தாகம் கடலை விட்டு
கரைக்கு அலைகிறது.
தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும்
குருதியில் தணிகிறது.
ஏழையின் தாகம் எதிர்ப்பவன் முன்னே
எங்கோ போகிறது
கோழையின் தாகம் நீரைக் கண்டும்
குடிக்க மறுக்கிறது
நீரின் தாகம் பள்ளம் தன்னை
நோக்கிப் பாய்கிறது.
வேரின் தாகம் வேண்டிய மட்டும்

சிப்பியின் தாகம் சிறுதுளி வாங்கி
முத்தாய் ஆகிறது.
சிற்பியின் தாகம் சிதைந்த கல்லை
சிலையாய்ச் செய்கிறது.
நடிப்பவன் தாகம் கைகள் தட்டும்

குடிப்பவன் தாகம் குடலைக் கருக்கி
குழியில் சாய்க்கிறது.
கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
கவிதையில் தணிகிறது.
புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
பிரளயம் நடக்கிறது .
-சிவகுமாரன்
1986 கவிதை எழுதிப் பழகிய காலம் .