புதன், ஏப்ரல் 09, 2014

ஓட்டுக் கேட்டு வாராங்களே














தேர்தல் நெருங்கிருச்சு
திருவிழா போல் ஆகிருச்சு
ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டி
விளம்பரங்க பெருகிருச்சு 
ஓட்டுக் கேட்டு வாராங்களே செல்லையா - அதில
ஒருத்தன் கூட உருப்படியா இல்லைய்யா.


வெள்ளை வேட்டி துண்டு போர்த்தி 
விதவிதமா மீசை வச்சு 
கள்ளப்பணம் கருப்புப்பணம்
கரன்சியாக மாத்திக்கிட்டு
கொள்ளைக்காரன் ஒட்டுக் கேட்டு வார்றாம்மா- அவன்
கொள்ளையில உனக்கும் பங்கு தார்றாம்மா.

முடிச்சவிக்கிப் பயல்களெல்லாம்
முகமூடி போட்டுக்கிட்டு
அடிச்ச கொள்ளை போதாதுன்னு
அரசியலில் புகுந்துகிட்டு
நடிக்கிறானே  நல்லவன்போல் செல்லையா   -அவனை
நம்பி மோசம் போகலாமோ சொல்லய்யா.

காடு கழனியெல்லாம்
காசாக்கி வித்துப்புட்டான்
ஆடு மேச்ச புறம்போக்கு
நெலத்த எல்லாம் அமுக்கிப்புட்டான் 
வீடு தேடி வாராண்டி செல்லம்மா - நீ
வெளக்கமாத்தை கையிலெடுத்து நில்லம்மா.

தோளில துண்டு போட்ட
தோழரெல்லாம் சீட்டுக்காக
காலில மானம்கெட்டு
கவுத்து விழுந்து கெடக்குறாக,
ஆளில்லாம போயிட்டோமே  கண்ணையா -இப்ப
அனாதையா ஆகிட்டோமே  என்னய்யா.

காடு வெளையவில்லை
கழனி நெறையவில்ல
ஆடுமாடு மேய்க்க கூட
ஆத்தாடிவழியுமில்லே
மாடுபோல ஒழைக்கிறோமே செல்லம்மா-நம்மை
மனுசனாக மதிக்க யாரும் இல்லம்மா.


வடிக்க அரிசி தந்தான் 
எரிக்க விறகு இல்ல
படிக்க கம்ப்யூட்டர் தந்தான்,
கனெக் ஷனுக்கு கரண்ட் இல்ல'
குடிசையில கொடுத்ததெல்லாம் சின்னய்யா - உன்னை 
குடிக்க வச்சே புடிங்கிட்டானே என்னய்யா. 

அஞ்சு வருஷம் நம்மை
அடிமையாக நடத்திப்புட்டு
கொஞ்சநஞ்சம் இருப்பதையும்
கொள்ளை அடிக்க திட்டம் போட்டு 
பஞ்சமா பாவி வாரான் செல்லம்மா - நீ
பாத்துக் கொஞ்சம் சூதனமா நில்லம்மா.

                                                                                                     -சிவகுமாரன்

பாடியிருப்பவர்கள் : பிரபு  & விக்கி 


14 கருத்துகள்:

  1. /// வெளக்கமாத்தை கையிலெடுத்து நில்லம்மா... ///

    அப்படிச் சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  2. இளமுருகன்ஏப்ரல் 10, 2014 12:07 AM

    கவிஞரே நீங்க கொஞ்சம் பாத்து சூதனமா இருங்க. இங்க கவிஞர்களைவிட கொள்ளையர்கள்தான் அதிகம்

    பதிலளிநீக்கு
  3. நல்ல விழிப்புணர்வுக் கவி..

    பதிலளிநீக்கு

  4. வணக்கம்!

    ஆட்சி வெறியாின் காட்சிகளைத் தாம்பாடி
    மாட்சி விளைத்தீா் மனத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  5. அனைவரின் மனம் நிலையை
    அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. உண்மையை எடுத்துரைத்த கவிதை அருமை! நல்ல விழிப்புணர்வும் கூட நன்றி! வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு

  7. ஓட்டுக்காக ஊரெல்லாம் போனாங்க
    உருப்படியா அவங்களென்ன செய்தாங்க
    கேட்டுபலன் ஏதுமிங்கே இல்லிங்க
    கேடுகெட்ட அரசியலே தொல்லைங்க
    போட்டுபோட்டு கண்டபலன் ஏதுங்க!
    போட்டபின்னர் பெற்றதெலாம் தீதுங்க
    நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க
    நாளெல்லாம் இதையெண்ணி வெம்புங்க

    பதிலளிநீக்கு
  8. அற்புமான பாடல் வரிகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக எழுதப்பட
    உண்மை வரிகள் ! உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான பாடல் வரிகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக எழுதப்பட உண்மை வரிகள் ! உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
  10. //வெளக்கமாத்தை கையிலெடுத்து நில்லம்மா.//

    ஆ.ஆ.க?!:))

    பதிலளிநீக்கு
  11. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது தன்னால் அடங்கும்... ஏமாளி சனத்தைத் திருத்தினால் ஏய்ப்பவனுக்கு வேறு வழியில்லாமல் போகும்... சிந்தனை பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  12. த்ப்பாமல் வளர்ந்த கவியா நீங்கள்?
    சுந்தர பாரதி இப்பொழுது தான் படித்தேன்..

    பதிலளிநீக்கு