ஞாயிறு, நவம்பர் 15, 2015

காதல் வெண்பாக்கள் 52



வெங்கனலில்  நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
பொங்குதடி உன்காதல் பூமழையாய்-அங்கிருந்து
ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்
ஆதலினால் காதல் சுகம்.

காட்டுக்குப் போனாலும்  காவலென ஓடிவரும்
கூட்டுக்கு மீண்டுமுனைக் கூட்டிவரும் - வாட்டுகிற
கூதலுக்குத் தீயாகும் கோடைக்கு நீராகும்
ஆதலினால் காதல் சுகம்.

சிவகுமாரன் 

(ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு  நன்றி.)



6 கருத்துகள்:

  1. ஈற்றடி தந்த நண்பருக்கும் அழகாக அமைத்த தங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. காதல் சுகமோ இல்லையோ இதுபோலும் வெண்பாக்கள் சுகம்:)

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்!

    அருங்காதல் வெண்பா அமுதென்பேன்! நெஞ்சுள்
    பெருங்காதல் இன்பைப் பிணைக்கும்! - உருகுகிறேன்
    வண்ணத் தமிழின் வளர்நடையைக் கண்டுநான்!
    உண்ண மறந்தேன் உணவு!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    பதிலளிநீக்கு
  5. ஆஹா அருமையான பா
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு