நீயிருந்து பெய்தமழை 
   நேற்று வந்தது-இங்கு
நீயில்லாமல் என்னைக்கண்டு
நீயில்லாமல் என்னைக்கண்டு
   திகைத்து நின்றது.
வாயில்வரை வந்துபின்னே
   வரமறுத்தது-என்
வாசல்சன்னல் கதவுடைத்து
வாசல்சன்னல் கதவுடைத்து
   வேகங்கொண்டது
கோயிலுக்குள் சிலையைத் தேடி
    கோபம் கொண்டது-தன்
கோபம்காட்ட வீதியெங்கும்
கோபம்காட்ட வீதியெங்கும்
    கொட்டித் தீர்த்தது.
போயிருக்கும் மழைமீண்டும்
    தேடிவந்திடில்- என்ன
    பொய்யுரைத்து நான்பிழைப்பேன் 
    பெண்மயிலே சொல்.
சிவகுமாரன்
13.03.16
 
 
 
 
 
 
 
 
 

 
 
