வெள்ளி, அக்டோபர் 21, 2016

மரங்கள்


எல்லா மரங்களும்
போதிமரங்களே.
பொல்லா மரங்களென்று 
பூமியில் இல்லை.

மரங்கள்
புத்தனைப் போன்றவை.
அதிகம் ஆசைப்படுவதில்லை .
வேர்நீட்டம் தாண்டி
விருப்பம் வளர்ப்பதில்லை.

மரங்கள்
வரையறுத்து வாழ்கின்றன.
இருக்கும் இடம்விட்டு
எங்கும் பறப்பதில்லை
இரைதேடி.

மரங்கள்
இயேசுவைப் போன்றவை.
ஒருகிளை வெட்டினால்
மறுகிளை காட்டுகின்றன.

மரங்கள்
கீதைக்கும் மேலானவை.
அவை
கடமையச் செய்கின்றன.
நாம்
பலனை அனுபவிக்கின்றோம்.

எல்லாப் புகழும் 
இறைவனுக்கே என்றார் நபிகள்.
எல்லா உறுப்பும் 
மனிதனுக்கே என்கின்றன
மரங்கள்.

மரங்கள்
பொதுவுடைமைவாதிகள்
அகன்ற  மரங்கள்
அணைத்துக் கொள்கின்றன.
பலமற்றக் கொடிகள்
பற்றிக் கொள்கின்றன.

மரங்கள் 
வழிப்போக்கர்களின் 
வசந்த மண்டபங்கள்.
களையெடுக்கும் பெண்களின் 
கைக்குழந்தைக் காப்பகங்கள் .

அழகுப் பிள்ளையாரின் 
அரச மரத்தடி. 
புத்தனின் போதிமரத்தடி
மாணிக்க வாசகரின் 
குருந்த மரந்தடி
எத்தனையோ ஞானிகள்
இருந்த மரத்தடி.
.......……………
ஞானம் பிறப்பித்தவை
மதங்கள் அல்ல.
மரங்களே.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.
வீட்டுப் பிள்ளைகள்
விட்டுப் போனபின்
தோட்டத்து மரங்களே
துணையிருக்கின்றன.

ஈசன் எந்தை இணையடி நிழலே
என்றார் அப்பர்.
வீசும் தென்றல் மரத்தடி நிழலே
என்பேன் நான்.
சிவகுமாரன் 

18 கருத்துகள்:

  1. கனியிருக்கும் மரம் கவர்கிறது அண்ணா.

    இன்னொரு முறை வருவேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தெய்வங்களை விட உயர்ந்தவை தாம் அவை.

    தா வரம் என்று தவமின்றிக் கேட்க முடிகிறதே! :)

    பதிலளிநீக்கு
  3. ஞானம் பிறப்பித்தவை
    மதங்கள் அல்ல.
    மரங்களே.

    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  4. நம்மாளுங்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  5. உங்கள்சிந்தனை வியக்க வைக்கிறது சிவகுமாரா

    பதிலளிநீக்கு
  6. மரங்கள் மன்னனைப்போன்றவை கொடுக்கும் வள்ளல் மிகவும் அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  7. மரங்கள் மன்னனைப்போன்றவை கொடுக்கும் வள்ளல் மிகவும் அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  8. //மரங்கள்
    வரையறுத்து வாழ்கின்றன.வரையறுத்து வாழ்கின்றன.
    இருக்கும் இடம்விட்டுஇருக்கும் இடம்விட்டு
    எங்கும் பறப்பதில்லைஎங்கும் பறப்பதில்லை
    இரைதேடி.இரைதேடி.//

    நிதர்சனமான உண்மை கவிஞரே
    தொடருகிறேன் உம்மை.
    த.ம.1

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை! மரம் பற்றி நீங்கள் பாடியது என் காதில் கேட்டது[[[[[

    பதிலளிநீக்கு
  10. மரத்தின் புகழ்பாடி உயர்கிறது உங்களது கவிதையின் தரம்.
    Back in form என்பதாகத் தெரிகிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமை அருமை
    //மரங்கள்
    வழிப்போக்கர்களின்
    வசந்த மண்டபங்கள்.
    களையெடுக்கும் பெண்களின்
    கைக்குழந்தைக் காப்பகங்கள் .//
    மரபுக் கவிதை மட்டுமல்ல புதுக் கவிதையிலும் கலக்குகிறீர்கள்.

    பயன்படா மரங்கள் என்று ஒரு கவிதை? எழுதி இருந்தேன் அதில்

    பயன்படா மரங்கள் என்றும்
    மண்ணிலே முளைத்ததில்லை
    மடிந்தபின்னும் மனிதருக்குதவும்
    மரங்களுக்கு இணையே இல்லை.

    மரங்களின் மகிமை அறியா
    மனிதரில் சிலபேர் தன்னை
    பயன்படா மரங்கள் என்பேன்
    மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.//


    இப்படி எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. ரசித்தோம் ரசித்தோம்! மரபு, புதுக் கவிதை என்று கலக்கல்தான்!! புதுக்கவிதையும் பொருள்பட ரசிக்கும் படியாக அருமை...

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு