சனி, ஜூலை 07, 2012

ஆலைக்குரல் 20




அற்பமென பாதுகாப்பை அலட்சியம் செய்தல்
தற்கொலை முயற்சிக்குச் சமம் ,

விழிப்புணர்ச்சி இன்றி வேலை செய்வோர்க்கு 
பழிச்சொல் வநதிடும் பார் .

சுமையென்பார் பாதுகாப்பு , சுகமென்பார் விதிமீறல் 
இமைப்பொழுதில் வருவான் எமன், 

எனக்கென்ன என்று இருந்தால் நிச்சயம் 
உனக்கும் வரும்பார் ஊறு..


தள்ளிப் போட்ட காரியம் - கடலில்
அள்ளிப் போட்ட பொருள்.. 

சிவகுமாரன்

மேலும் குரல் கேட்க இங்கே செல்லவும் 

5 கருத்துகள்: