திங்கள், அக்டோபர் 04, 2021

இ(னி)ணைய நினைவுகள்.

னிணைய நினைவுகள் .















நினைவுகளாகிப்
போகிறார்கள்
மனிதர்கள்.
இருந்தும்
இறந்தும்.

இனிய நினைவுகள்
இணைய நினைவுகளாய்
மாறி விட்டன

காலப்போக்கில்....
என்றிருந்தது
கணத்தில்....
என்றாகி விடுகிறது
இப்போதெல்லாம்.

அறிவியல் வளர்ச்சியில்
மாயப் பிம்பங்களாய்
மனிதர்கள்.
ஐம்புலன்களின்
அனுபவங்களை
அலைபேசி எனும்
மாயப் புலன்களால்
பரிமாறிக் கொள்கிறார்கள்.

தனித்தனித்
தீவுகளாய்
இதயங்கள்.
இணைத்து வைப்பதாய்
இறுமாப்பு கொள்கிறது
இணையம்.

கறிச்சுவை
தருமோ
இணையச் சுரைக்காய்.??!!

                        
                                  - சிவகுமாரன்

4 கருத்துகள்: