உழைத்துப் படிப்பாய்! உறுதியாய் தெய்வம்
அழைத்துக் கொடுக்கும் அருள்.
அருளென்று நம்பு! அகந்தை அகற்று!
பொருளைக் குவிக்கின்ற போது.
பொருளைக் குவிக்கின்ற போது.
போதிய மட்டும் பொருள்தேடு! நிம்மதி
ஊதியத்தில் இல்லை உணர்.
ஊதியத்தில் இல்லை உணர்.
உணர்ச்சிப் பெருக்கின் உறுதிகள் யாவும்
கணக்குத் தவறிடும் காண்.
கணக்குத் தவறிடும் காண்.
காண்பவை யாவும் கடவுளின் கைவண்ணம்.
வீண்பெருமை வேண்டாம் விடு.
வீண்பெருமை வேண்டாம் விடு.
விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
சுடும்வரை தாங்கிடு சூடு!
சுடும்வரை தாங்கிடு சூடு!
சூடான சொல்லும் சுயநல புத்தியும்
கேடாய் முடியுமாம் கேள்.
கேடாய் முடியுமாம் கேள்.
கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.
கேளாதே வீணரின் கேலிகள் யாவையும்.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.
அவப்பெயர் பெற்றால் அழித்தல் கடினம்.
தவம்போல் தவறைத் தவிர். 40.
தவம்போல் தவறைத் தவிர்.
தொடரும்....
சிவகுமாரன்

.jpg)








.jpg)
