திங்கள், செப்டம்பர் 06, 2010

ஹைகூ கவிதைகள் 10

     

வரதட்சணையாய் வந்த டீவியில்
பரிதாபமாய்
மாமனார் முகம்.

மாமனார் வாங்கித்தந்த
ஃபிரிட்ஜ் முழுவதும்
ஐஸ் வாட்டர்.

இன்று ஏன் வரவில்லை
பிச்சைக்காரர்கள்?
பானை நிறைய பழையது.

ஊர் கிடக்கட்டும்
ஓடிப் போகலாம் வா.
நகைகளுடன்.

வரைந்த கோலத்தில்
மறைந்து போயின
புள்ளிகள்.

              -சிவகுமாரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக