ஞாயிறு, அக்டோபர் 03, 2010

காதல் வெண்பாக்கள் 8

     நாணம்?
ஓர விழியால்
  ஒளிந்தே எனைப் பார்ப்பாள்.
பாரடி என்றே
  பகர்வேன் நான் - நேராக
காண மனம் கூசி
  காலால் நிலம் கீறி
நாணிக் கடிப்பாள்
  நகம்.






       கவி ஊற்று
காதல் கவியெழுத
  கற்பனைகள் தோன்றாமல்
மோதும் கருத்து
  முரண்பட்டால் - ஏதும்நான்
எண்ணாமல் பின்செல்வேன்
  ஏறெடுத்துப் பார்த்துவிட்டு
கண்ணாலே சொல்வாள்
                     கவி.
                                                                     -சிவகுமாரன்

                   

1 கருத்து: