வியாழன், நவம்பர் 25, 2010

காதல் வெண்பாக்கள் 12

                    
                                             உருபு மயக்கம் 
                                      ஆரஞ்சுத் தேன்சுளையா !
   அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
  கோவையா- யார்தான் 
பவளத்தைக் கீறிவைத்தார்
   பார்ப்போம் ! அடடா
                                       அவளின் இதழா
                                              அவை.


       மாது மயக்கம் 
அதுவென்ன உன்விழிக்குள்
  ஆளை இழுக்கும்
மதுக்கிண்ணப் போதை
  மயக்கம் ? - எதுக்கும்
தனியாகச் செல்லாதே
   தேனில் திராட்சைக்
கனியாகத் தோன்றும்உன்
      கண்.



15 கருத்துகள்:

  1. நன்றாக
    இருக்கிறது. மிக
    அருமை.

    பதிலளிநீக்கு
  2. இதுல்லாம் கொஞ்சம்
    கூட நல்லா இல்லப்பா.

    பதிலளிநீக்கு
  3. உருபு மயக்கம் - தலைப்பே கவிதை தலைவரே!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் தமிழ் மயக்குகிறது. அழகு.

    பதிலளிநீக்கு
  5. "சிலம்பில்" ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு, "காதல் வெண்பா"வில் இளைப்பாருகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  6. அப்போ கண்ணகி. இப்ப கோவலன். ஹி..... ஹி

    பதிலளிநீக்கு
  7. நண்பரே தங்களின் பின்னூட்டத்தை தற்போது தான் பார்த்தேன். உங்களுடைய சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்ததா. இல்லை வேறு ஏதேனும் உதவி தேவைபடுகிறதா. தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்
    www.vandheamadharam.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. நண்பரே தங்களின் பின்னூட்டத்தை தற்போது தான் பார்த்தேன். உங்களுடைய சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்ததா. இல்லை வேறு ஏதேனும் உதவி தேவைபடுகிறதா. தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்
    www.vandheamadharam.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. வெண்பா இரண்டும் அருமை நண்பா...

    பதிலளிநீக்கு
  10. நண்பரே! எனக்கு ஒரு ஆசை! நீங்கள் முதலில் ஒரு தொகுப்பு கொண்டுவரவெண்டும். அடுத்து ஒரு காவியம் இயற்ற வெண்டும்.நாலுபடியரிசி கூடுதல் கூலி கெட்டதற்காக குடிசக்குள் எரித்தார்களே அந்த கொடுமையை ஒரு வீரகாவியமாக எழுதவேண்டும்.செய்வீர்களா?---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  11. அருமை தோழா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. நண்பரே இன்றுதான் உங்கள் பதிவு கண்டேன். அருமை தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. @ காஷ்யபன்....
    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு பயத்தை தருகிறது. தொகுப்பு வெளியிட வேண்டும் என்பது என்பது நீண்ட கால கனவு. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் அமையவில்லை. எனக்கு சாமர்த்தியமும் போதாது. காவியம் பாடும் அளவுக்கு எனக்கு அறிவோ அதற்கான் அவகாசமோ இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால் இதில் பெரும்பாலான கவிதைகள் மோகன்ஜி சொன்ன மாதிரி பரணில் ஏறி எடுத்தவை.காலம் கனியும் போது, , எழுதுவேன்.நீங்கள் நம்ப மாட்டீர்கள், இறைச்சித்தம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன். சரி, நீங்கள் குறிப்பிடும் சம்பவம் பற்றி உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  14. இப்படி அழகான இதழ்களைப் பார்த்தால்,எந்தக் காதலனுக்குத்தான்
    முத்தமிடத்தோன்றாது?!
    தரளம்மிடைந்துஒளிதவழக்குடைந்து

    இரு
    பவளம் பதித்த இதழ்”(குறிஞ்சிமலர்).

    நல்ல ரசிகர்தான் நீங்கள்!நல்ல கவிஞன் முதலில் நல்ல ரசிகன்தானே!
    அருமை

    பதிலளிநீக்கு