புதன், மார்ச் 09, 2011

சின்னஞ்சிறு நெருப்பு

















வாசலிலே ரோஜாச்செடி
   வைத்து நிதம் நீர் தெளிக்க
   வாசமலர் நித்தமொன்று  மலரும்- உடன்
ஊசிமுனை முள்ளுமொன்று வளரும்.

நட்டநடு ராத்திரியை
   பட்டப்பக லாக்கிவிட
   நாள்முழுதும் மின்விளக்கு எரியும். - அதைத்
தொட்டு விட்டால் பின்விளைவு புரியும்.

ஒற்றைத்திரி நெய்விளக்கில்
   ஊற்றிவைத்த எண்ணெயொடு  
   ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?

செல்லும் வழி கல்லு முள்ளு
   செய்வதெல்லாம் தில்லுமுல்லு 
   சேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம் - அதைத்         
தள்ளிவிட்டு நில்லாமல் என் ஓட்டம் .

என்னுடைய கன்னித் தமிழ்
   ஈசன்தந்த சங்கத் தமிழ்
   ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு
.  

                                            


                                              

                                          
                                                                   -சிவகுமாரன் 

                                                    

      

39 கருத்துகள்:

  1. //ஒற்றைத்திரி நெய்விளக்கில்
    ஊற்றிவைத்த எண்ணெயொடு //

    முரணாக இருக்கே ? எண்ணைக்கு பதில் நெய்யோடு என்று இருக்க வேண்டுமோ ???

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அருமை.மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்தேன்
    சிந்துகவி சிவராமன் என உங்களுக்கு
    பட்டம் தாராளமாகத் தரலாம்
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வாசலிலே ரோஜாச்செடி
    வைத்து நிதம் நீர் தெளிக்க
    வாசமலர் நித்தமொன்று மலரும்- உடன்
    ஊசிமுனை முள்ளுமொன்று வளரும்.

    .....வாழ்க்கையில் அமைந்து இருக்கும் முரண்களை சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நல்லா வந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நெய் என்பது பொதுப் பெயர் எல்.கே.
    பசுவின் நெய்யைத்தான் நாம் நெய் என்கிறோம்.
    எள் + நெய் எண்ணெய் ஆயிற்று. அதை நல்லெண்ணெய் என்கிறோம்.
    தேங்காய் +எள்+நெய், கடலை+எள்+நெய்
    முரணாக இல்லையா ?

    -- தாள நயத்திற்காக வந்து விழுந்த வார்த்தைகள் இவை.
    இருந்துவிட்டு போகட்டுமே எல்.கே. தங்கள் அனுமதியுடன் .

    பதிலளிநீக்கு
  6. தங்கள் பட்டத்திற்கு நன்றி ரமணி சார்.
    ( ஆனாலும் இந்த பட்டமெல்லாம் எனக்கு அதிகம் தான் )

    பதிலளிநீக்கு
  7. நன்றி சித்ரா மேடம்.
    வாழ்க்கை மட்டுமல்ல.
    மனிதர்களே முரண்பாட்டு மூட்டைகள் தான். ( எங்கோ படித்த ஞாபகம் ) .
    எல்லாவற்றையும் அதனதன் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால் பிரச்சினைகளின் தாக்கம் குறையும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  8. Super . . . Keep it up my friend. . . By www.kingraja.co.nr

    பதிலளிநீக்கு
  9. "..செல்லும் வழி கல்லு முள்ளு
    செய்வதெல்லாம் தில்லுமுல்லு
    சேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம்.."
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  10. எதோ என் சிறிய அறிவுக்கு எட்டியதை சொன்னேன் கவியே .. இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரம், சந்தம் கொண்டு சிந்து பாடும் கவிதை அருமை. சின்னஞ் சிறு நெருப்பின் நன்மைகளையும் தீமைகளையும் கலந்து கவிதை தாளலயத்துடன் எம்மை இலயித்து விட்டது.

    பதிலளிநீக்கு
  12. எதுகை மோனையோடு தாளக்கட்டும் இணைந்து நல்லாயிருக்கு இசைத்தேன் ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  13. /////செல்லும் வழி கல்லு முள்ளு
    செய்வதெல்லாம் தில்லுமுல்லு////

    ஆமாங்க என் உணர்வை சொன்னது போல இருக்கு....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    பதிலளிநீக்கு
  14. கண்ணோடு கண் கலக்கும் காதல் நெருப்பு பற்றியும் சொன்னால் என்னைப் போல இளவட்டங்கள் சந்தோஷப்படுவோம்.
    கவிதை அபாரம்!! ;-))

    பதிலளிநீக்கு
  15. அருமை. தமிழைக் பதவி மற்றும் உதவிக்காக விற்று பிழைக்கும் கூட்டத்தில் சேராமல் நீங்கள் மாறுபட்டு நிற்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. இயல்பான சந்தத்தோடு அழகான கவிதை சிவகுமாரன்!

    //ஒற்றைத்திரி நெய்விளக்கில்
    ஊற்றிவைத்த எண்ணெயொடு
    ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
    பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?//

    ஒளிருது என்பதற்குபதில் ஏற்றிவைத்த என்றுவந்தால் இன்னும் அழகாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  17. அழகான பாட்டு!
    போட்டுக்கலாம் மெட்டு!
    கவிதை மழைக் கொட்டு!
    கவிச்சித்தனுக்கு ஒரு ஷொட்டு!

    பதிலளிநீக்கு
  18. miga arumai..nandraga rasithu ezhudhpatta kavidhai..following u.

    பதிலளிநீக்கு
  19. ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
    பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?
    Interesting.

    பதிலளிநீக்கு
  20. கன்னித் தமிழுக்கு, ஈசன் தந்த சங்கத் தமிழுக்கு “ரூட்டு” தேவையா குமரா.?

    பதிலளிநீக்கு
  21. நல்லதோர் கவிதைக்கு நன்றி!

    ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
    என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு//

    ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
    என்ன சொல்ல,அவரோடேயென் கூட்டு.

    பதிலளிநீக்கு
  22. கவிதையின் தலைப்புத்தான் சின்னஞ்சிறு நெருப்பு. அதன் வெளிச்சமோ (பொருளோ) மின்னலெனப் பளீரென்று.

    வாழ்த்துக்கள், கவிஞரே.

    பதிலளிநீக்கு
  23. நன்றி ராஜா
    நன்றி ஸ்ரீ அகிலா
    நன்றி டாக்டர்
    நன்றி நிரூபன்
    நன்றி ஹேமா
    நன்றி மதி சுதா
    நன்றி RVS
    நன்றி கீதா மேடம்

    பதிலளிநீக்கு
  24. சுந்தரா கூறியது

    \\இயல்பான சந்தத்தோடு அழகான கவிதை சிவகுமாரன்!

    ஒளிருது என்பதற்குபதில் ஏற்றிவைத்த என்றுவந்தால் இன்னும் அழகாக இருக்குமோ? //

    நன்றி சுந்தரா .
    ஏற்றிவைத்த - ஓசைநயத்துடன் நன்றாக உள்ளது. நன்றி.
    ஆனால் நான் மோனைத்தொடைக்காக ஒளிருது என்று எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  25. தென்றல் கூறியது
    \\அழகான பாட்டு!
    போட்டுக்கலாம் மெட்டு!
    கவிதை மழைக் கொட்டு!
    கவிச்சித்தனுக்கு ஒரு ஷொட்டு!///

    உள்ளத்தில் பட்டு
    உணர்வைத் தொட்டு
    சென்றது
    தென்றலின் ஷொட்டு

    பதிலளிநீக்கு
  26. நன்றி சவிதா ரமேஷ்.
    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்
    நன்றி வை.கோ சார்

    பதிலளிநீக்கு
  27. GMB சார் சொன்னது
    \\கன்னித் தமிழுக்கு, ஈசன் தந்த சங்கத் தமிழுக்கு “ரூட்டு” தேவையா குமரா.?//

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
    தனித்தமிழில் தான் எழுத வேண்டும் என்று நான் சபதமெல்லாம் எடுக்கவில்லை. எழுதும் போது வந்து விழும் வார்த்தைத்யை வலிந்து மாற்ற விரும்பவில்லை. அவ்வளவுதான்
    இந்த ரூட்டுத் தமிழும்
    ஈசன் என் பாத்திரத்தில்
    போட்ட தமிழ் தான் .

    பதிலளிநீக்கு
  28. மோகன்ஜி சொன்னது
    \\\நல்லதோர் கவிதைக்கு நன்றி!

    ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
    என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு//

    ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
    என்ன சொல்ல,அவரோடேயென் கூட்டு.///

    நன்றிஅண்ணா .
    தம்பி பாட்டில் ஒரு பிழை என்றதும் ஓடோடி வந்து விட்டீர்கள்.
    GMB சார் இப்போ ஓகேயா ?

    பதிலளிநீக்கு
  29. நன்றி நாகா
    நன்றி கனாக்காதாலன்

    பதிலளிநீக்கு
  30. சமுத்ரா சொன்னது
    \\என்ன சொல்ல வர்றீங்க?//

    இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது ...ஆமா .
    ( உண்மையில எனக்கும் புரியலங்க )

    பதிலளிநீக்கு
  31. உங்க ரூட்டு நல்ல ரூட்டு தான்.. தொடர்ந்து இசை கேட்க நாங்களும் பின்னால தானே வரோம்..

    பதிலளிநீக்கு
  32. வருக வருக ரிஷபன் சார்.
    ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  33. சுனாமியை விடுங்கள்....அதை விட கொடுமை தொடரும் அபாயம் அணுக கதிர் வீச்சு. அணு சக்தியை வைத்து மிரட்டும் அனைத்து நாடுகளுக்கும் 'நீங்கள் யாரும் என்னை மீறி அல்ல' என்று இயற்கை கொடுத்திருக்கும் பாடம். எங்களை மீறி என்ன நடந்து விடும் என்ற மனித ஆணவத்தின் மீது விழுந்த அடி.

    பதிலளிநீக்கு
  34. சும்மா அசத்தி விட்டீர்கள் சிவா,,, என்ன அழகான பாட்டு.....

    பதிலளிநீக்கு
  35. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிருஷ்ணப்பிரியா

    பதிலளிநீக்கு