வெள்ளி, அக்டோபர் 07, 2022

கனவுக்கடத்தல்.



முத்தை விழுங்கத்தான்
வாய்பிளந்து கிடக்கின்றன
எல்லாச் சிப்பிகளும்.

சிறகு விரிக்கவே
இடப்படுகின்றன
முட்டைகள்..
பொரித்துத் தின்ன அல்ல

விட்டுவந்த கன்றுகளில்
முளைத்து வருகிறது
வெட்டப்பட்ட
தோரண வாழையின்
ஏக்கங்கள்.

வேர்களின் தாகத்திற்கு
தண்ணீர் குடிக்கின்றன
விழுதுகள்.

தலைமுறைகள் தாண்டி
கடத்தப்படுகின்றன
கனவுகள்.

                                               சிவகுமாரன்.
                                                07/10/2022.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்பர் வரிகள் இரசித்தேன் கவிஞரே...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே