ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஹைகூ கவிதைகள் 15

ஓவியம் பழகும்
தூளிக் குழந்தை.
மூத்திரக் கோடுகள்.

இடையே வலிக்குமோ
இறக்கைகள்.
கடல் தாண்டும் பறவை.

தொலைந்த பர்ஸில்
பணம் அட்டை இத்யாதியுடன்
அம்மாவின் படம்.

நீருக்குள் வாளி
சுலபமாய் இழுத்தேன்
கவிதையுடன் வாழ்க்கை.

கிளைத்து வளர்ந்தது
கிளியின் எச்சம்
சுவற்றில் ஆலமரம்.

                               -சிவகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக