ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

காதல் வெண்பாக்கள் 6

      போலிமரம்???

வீதிவழி நீநடந்தால்
  வெள்ளிக் கொலுசொலியில்
பாதிஉயிர் போகுதடி
  பின்தொடர்ந்து - போதிமரம்
தேடிப்போய் நானமர்ந்தேன்
  தேன்மொழியே  உன்நினைவால்
ஆடியதே வேரும்
    அசைந்து.

                    

  •   வாசம் தேடி
நீ-நகர்ந்து போனாலும்
  நெஞ்சுக்குள் நீ உதிர்த்த
பூ-நகர்ந்து போகவில்லை.
  பெண்ணே என் - பாநகர்ந்து
உன்னால் மயங்கி
  உனைத்தொடர்ந்து வந்திருக்கும்
பின்னால் திரும்பித்தான்
       பார்.
                                
                                                     -சிவகுமாரன்

1 கருத்து: