புதன், நவம்பர் 03, 2010

தீக்குச்சி விரல்கள்

நாங்கள்
விளக்கைத் தேடிய
விட்டில்கள் அல்ல.
விளக்கின் மீதே
வீசப்பட்டவர்கள்.


படிப்புச் சூரியனை
பார்க்க முடியாமல்
வெடிப்புச் சிவகாசியில்
வெந்து போனவர்கள்.


நாங்கள்
யாருக்கோ வெளிச்சம் தர
எங்கள் எதிர்காலத்தையே
இருட்டாக்கிக் கொண்டவர்கள்.


உங்கள்
தீபாவளிக் கொண்டாட்டத்தில்
கருகிப் போனது
மத்தாப்புக்கள் மட்டுமல்ல
எங்கள் 
வருங்காலமும்  தான்


எங்கள் பிஞ்சுக்கரங்களில்
மருதாணிக்குப் பதிலாய்
கந்தகமும் பாஸ்பரசும்


எங்கள் வளர்ச்சியை
பறைசாற்றும்
வரலாற்றுச்  சின்னங்களாய்
விரல்களில் கொப்புளங்கள்.


நாங்கள்
உண்ணக் கைஎடுத்தால்
விரல்களுக்குப் பதிலாய்
தீக்குச்சிகள்.
களைத்துப் படுத்தால்
கருவிழிக்குப் பதிலாய்
கந்தகத் துகள்கள்.


நாங்கள் என்ன
நரகாசுரன்களா?
பிறகேன் 
எங்களை எரித்துவிட்டு
இனிப்பு தின்கிறீர்கள் ?

                      -சிவகுமாரன்.

(அண்மையில் நடந்த பட்டாசு விபத்தில் பலியான பிஞ்சு மலர்களுக்கு காணிக்கையாய்.)

.

8 கருத்துகள்:

  1. பெயரில்லாநவம்பர் 06, 2010 11:42 AM

    As per law child labour is an offense. to whom?
    ita for the child only.
    sivamani

    பதிலளிநீக்கு
  2. tamilil comment ezhutha vazhi pannunka...muthal vari kadaisi vari irandum pidichchirunthathu

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் என்ன
    நரகாசுரன்களா?
    பிறகேன்
    எங்களை எரித்துவிட்டு
    இனிப்பு தின்கிறீர்கள் ?

    These lines itself speak a lot!

    பதிலளிநீக்கு