திங்கள், ஆகஸ்ட் 23, 2010

அட .... ஆமாம் !!

மனதின் அந்தகாரத்தில்
ஒளிந்து கொண்டிருக்கிறது
கோபம்.

அறிவு வெளிச்சம்
அற்றுப் போகும்போது
அது
உணர்ச்சி ஊன்றுகோல் தாங்கி
உலா வருகிறது.


நீண்ட காலமாய்
சேமித்து வைத்திருந்த
நிம்மதிச் செல்வத்தை
அது
நிமிடத்தில் திருடிவிடுகிறது.

கொஞ்சம் பதுங்கியிருந்து
அதன்
குடுமியைப் பிடித்திழுத்து
முகத்திரை கிழித்தால் தான்
தெரிகிறது
அது.....
முகமூடி போர்த்திவந்த
பயம்.

                                             -சிவகுமாரன்

2 கருத்துகள்: