ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

காதல் வெண்பாக்கள் 4

          சர்வம் சக்திமயம்
பண்பாடிப் பார்த்தேன்-என்
  பாட்டில்நீ! கொஞ்சம்நான்
கண்மூடிப் பார்த்தேன்
  கனவில் நீ! -விண்மூடும்
மேகம் தனைப்பார்த்தேன்
  மின்னல்நீ! நெஞ்சமது
நோகும் இடம்பார்த்தேன்
      நீ.

    மார்கழிப் பூவே
புள்ளிவைத்து நீபோட்ட
  பூக்கோலம் உள்ளுக்குள்
அள்ளிவைத்துச் சென்றாய்
  அடிமனதை!- மல்லிகையே
நாளை வருவாயா?
  நானிருப்பேன் இங்கேயே
காலை வரும்வரையில்
       காத்து.
                           
                           -சிவகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக